விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூன்றாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 10,734 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று (ஜூலை 13 ) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அதன்படி மூன்றாவது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 18,057 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 7,323 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 1,383 வாக்குகளும் பெற்றுள்ளனர். அன்னியூர் சிவா 10,734 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி தேர்தல்: பாமக, நாம் தமிழர் பின்னடைவு… திமுக தொடர்ந்து முன்னிலை!