ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சியளிக்கிறது : ராகுல், கமல் இரங்கல்!

Published On:

| By Kavi

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளை சட்டத்தின் முன் அரசு நிறுத்தும்  என்று நம்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள ராகுல் காந்தி

அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்ரு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஆம்ஸ்ட்ராங் கொலை : போலீசாருக்கு முதல்வர் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை… சென்னை வரும் மாயாவதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel