சாதம் வடித்த கஞ்சியைக் கூந்தலுக்கும், அரிசி களைந்த நீரை சருமத்துக்கும் பயன்படுத்துவது என்பது சமீபகாலமாக கொரியன் அழகு சிகிச்சைகளில் மிகவும் டிரெண்டாக உள்ள ஒன்று.
சாதம் வடித்த கஞ்சியை சருமத்துக்கும் கூந்தலுக்கும் பயன்படுத்தும் பாரம்பர்யம் அந்தக் காலத்திலிருந்தே உண்டு. சாதம் வடித்த கஞ்சியை சீயக்காய் கலக்கப் பயன்படுத்துவார்கள். இந்தக் கஞ்சியில் பெப்டைட்ஸ் (Peptides) மிக அதிக அளவில் இருக்கும். பெப்டைட்ஸின் பலன்களை உறுதி செய்ய நிறைய ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன.
பெப்டைட்ஸ் என்பவை அமினோ அமிலங்கள்தான். அதாவது, ஒருவகை புரதம். இதை வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போதும் சரி, உள்ளுக்கு உட்கொள்ளும்போதும் சரி, மிக மிக நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது சருமத்தின் இளமைக்கும் எலாஸ்டிக் தன்மைக்கும் காரணமான கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்’ எனப்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
வெயிலின் தாக்கத்தால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பையும். டிஎன்ஏ பாதிப்பையும் தடுக்கும் தன்மை பெப்டைட்ஸுக்கு உண்டு என்பதை உறுதிசெய்யும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில், சாதம் வடித்த கஞ்சியில் பெப்டைட்ஸ் ஓரளவு உள்ளது உண்மைதான்.
நம் சருமத்துக்குள்ளும் கூந்தலுக்குள்ளும் ஊடுருவும்படியான வடிவில் பெப்டைட்ஸ் உள்ள பொருள்களை உபயோகிப்பதுதான் சரியானது. முகத்தைக் கழுவவும் கூந்தலை அலசவும் இந்தத் தண்ணீரை தாராளமாக உபயோகிக்கலாம். அதனால் எந்தப் பக்க விளைவும் ஏற்படாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் மாங்காய் ஊறுகாய்
டிஜிட்டல் திண்ணை: மாறும் வேட்பாளர்கள் யார்? ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!